இடுகைகள்

மலரின் மௌனம் ( பாகம் -2)

படம்
  மீண்டும் மீண்டும் வீட்டின் உள்ளிருந்து பொருள்கள் வெளியே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு பொருளும் அந்த வீட்டின் நினைவுகளை சுமந்தபடி வாசலை கடந்து சென்றது. அந்த நேரத்தில்… பல ஆண்டுகளாக அந்த வீட்டின் சுவரில் பெருமையாக தொங்கியிருந்த பழைமையான பெரிய கடிகாரத்தை இருவர் தூக்கிக் கொண்டு வந்தார்கள். மரத்தால் செய்யப்பட்ட அந்த கடிகாரம், காலத்தின் சாட்சியாக இருந்தது. அதன் உள்ளே கீழே தொங்கியிருந்த வெள்ளி நிற மணி மெதுவாக ஆடிக்கொண்டே இருந்தது. ஒரு மணி அடித்தால் — “டாங்…” இரண்டு மணி அடித்தால் — “டாங்… டாங்…” பன்னிரண்டு மணி என்றால் — அந்த வீடு முழுவதும் அதிரும் அளவுக்கு “டாங்… டாங்… டாங்…” என்று ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த சத்தம்… ஒரு காலத்தில் அவளுக்கு பாதுகாப்பாக இருந்தது. ஆனால் சில நேரங்களில் அதே சத்தம், காரணமில்லாத ஒரு பயத்தையும் அவளுள் எழுப்பி விடும். இப்போது அந்த கடிகாரத்தையும் லொரியில் ஏற்றப் போகிறார்கள். அதை பார்த்தவுடன் பாத்திமா திடீரென ஓடிப்போனாள். அந்த பெரிய கடிகாரத்தை இரு கைகளாலும் கட்டிப்பிடித்துக் கொண்டாள். “இதை மட்டும் எடுத்துச் செல்லாதீர்கள்…” என்று சொல்ல முடியாமல் கதறினாள...

மலரின் மௌனம் (பாகம் -1)

படம்
  அந்த வீட்டின் முன்புறத் திட்டியில் அமைதியாக அமர்ந்திருந்தாள் பாத்திமா. முன்புற ரோட்டை வெறித்துப் பார்த்தபடி, ஏதோ ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தாள். அவளது கண்களில் தேங்கியிருந்த கண்ணீர், ஒவ்வொரு நொடியும் வழிந்தோடத் தயங்கியது. பல ஆண்டுகளாக அந்த இடம்தான் அவளின் இளைப்பாறும் உலகம். மகிழ்ச்சியான நாட்களிலும்… மனதை நொறுக்கும் துயரங்களிலும்… அதே திட்டியில் அமர்ந்து, அந்த ரோட்டை பார்த்தபடி தனிமையோடு பேசிக்கொண்டிருப்பாள். அங்கு வீசிய காற்றுக்கும் கூட அவளது மனக்காயங்கள் தெரியும். ஆனால் இன்று… அந்த அமர்வு வேறுபட்டிருந்தது. இது கடைசியாக அந்த இடத்தில் அமர்ந்து அழும் நாள் போல இருந்தது. வீட்டின் உள்ளிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்துவந்து லொரியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பழைய அலமாரி… அவள் சிறு வயதில் தூங்கிய கட்டில்… சுவரில் தொங்கியிருந்த கடிகாரம்… ஒவ்வொன்றும் வெளியே செல்லும் போது, நினைவுகளும் அவளது இதயத்திலிருந்து பிய்க்கப்பட்டு செல்லும் போல இருந்தது. ஒவ்வொரு பொருளையும் காணும் பொழுதும், பழைய நினைவுகள் வயிற்றைக் குடைந்து இதயத்தில் குத்தியது. சிரித்த நாட்கள்… அழுத இரவுகள்… காத்திருந்த கணங்கள்… அனை...

மலரின் மௌனம்

படம்
  மலரின் மௌனம்… கதை ஆசிரியரின் இதயத்திலிருந்து, ஒரு பெண்ணின் மௌனத்தின் பின்னால் மறைந்திருக்கும் வலி, தியாகம், காதல், ஏக்கம், போராட்டம் மற்றும் நம்பிக்கையின் பயணமே “மலரின் மௌனம்…” ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை உணர்வுகளோடு சித்தரிக்க வருகிறது. அவளது மௌனத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் சிரிப்பின் இரகசியங்களையும், கண்ணீர் துளிகளில் பதிந்திருக்கும் ரணங்களையும் உணர்ச்சிமிக்க வடிவில் வெளிப்படுத்த வருகிறது. இது சின்னதொரு சிறுகதையின் சாயலும் அல்ல… நடைபோடும் நாவலும் அல்ல… கதை கூறும் காவியமும் அல்ல… நயம் மிக்க கவிதையும் அல்ல… மாறாக, இவை அனைத்தையும் ஒன்றிணைத்து உணர்வுகளின் ஓவியமாக உருவாகும் நயமிக்க ஒரு தொடர்கதை. வாசகர்களின் இதயங்களை தொடும் கதையாக இது அமையும் என நம்புகிறேன். பல பாகங்களாக பயணிக்கவிருக்கும் இந்த உணர்வுப் பயணத்தில் நீங்களும் இணைந்து பயணிக்க அன்புடன் அழைக்கிறேன். அன்புடன், அப்பாஸ் பஸ்மினா

மலரின் மௌனம் ( தொடர் கதை) வெகுவிரைவில்

படம்
  வெகுவிரைவில் வெளிவரவுள்ளது... மலரின் மௌனம் ( தொடர்கதை) ஆசிரியர்- அப்பாஸ் பஸ்மினா
படம்
 
படம்