இடுகைகள்

படம்
பனி வானத்தோடு மோகம் கொண்ட மேகம் முகடுகளுக்கு பஞ்சு மழை பொழிகிறது...

வாக்கு

தேர்தலுக்கு வாக்களிக்க போன பொண்ணு, தெரிவானா வாக்கு நல்ல கண்ணு என வாக்கப்பட்டு வந்து நின்னா சீமன் வீட்டு பையனுக்கு... கடைசியில வாக்களிக் போன பொண்ணு வாக்கப்பட்டு வந்து நின்னா...

ஏமாற்றம்

படம்
எழுதிமுடித்த அனுபவக் கவிதைகளை காகிதக் கப்பல் எடுத்துச் சென்றது, எழுதவிருக்கும் எதிர்பார்ப்புக் கவிதைகளை மை இன்றி பேனா முனை எழுத மறுக்கிறது... எதை எப்படிச் சொல்வது? எல்லாமே ஏமாற்றமாய்ச் செல்கிறது.

யாவும் கற்பனை

படம்
கடல் மீது நடந்து வானை  எட்டிப்பிடிக்கிறேன். மைதான வானில் விளையாடி பரிதி பந்தை அடிக்கிறேன். மலர் மீது கண் மலர்ந்து தேனருந்தி தேனீக்களுடன் கதை பேசுகிறேன். நிலா மீது அமர்ந்து நட்சத்தரங்களின் தூசு தட்டுகிறேன். வானவில் குடை பிடித்து முத்து மழைத்தளிகளால் மாலை கட்டுகிறேன். நீர் வீழ்ச்சியில் சருக்கு மரமேறி மலைகளுடன் தலையணை சமர் செய்கிறேன். நதி வழி பயணிக்கிறேன் நந்தவன அழகு மாளிகையைத் தேடி. நிரந்தரமற்ற உலகில் அருத்தமின்றி பொருத்தமின்றி உலகோர் உருவாக்கிய  ஊமை வலிகளுக்கு கற்பனைகள் கசாயமாகின்றன.         அப்புத்தளை அப்பாஸ்

அம்மா....அப்பா....

அன்பின் ஒத்தசொல் கொண்டு எழுதினேன்-அதன் அர்த்தம் அம்மா ஆனது, அனுபவத்தின் ஒத்தசொல் கொண்டு எழுதினேன்-அதன் அர்த்தம் அப்பா ஆனது...            அப்புத்தளை அப்பாஸ்

கனவு தேவதை

அவள் கற்பனையின் காவியம் கனவின் ஓவியம்... அவளின் மௌனம் மல்லிகையின் மணமாய் வீசும்... அவளின் குரல் குயிலின் கானமாய் பேசும்.. அவளின் நிறம் மாலைநேர மஞ்சள் வெயிலின் பொன்னாய் மாறும்... அவளின் கூந்தல் காரிருளின் கருமையைச் சேறும்... அவளின் சிரிப்பு சித்திரமாய் சித்தரிக்கும்... அவளின் பார்வையில் விண்மீன்கள் விளையாடும்... அவளின் மென்னையில் பெண்மையே சிலையாகும்...            அப்புத்தளை அப்பாஸ்

கவிதை வரிகள்..

என் கவிதை வரிகள் உளியால் செதுக்கப்பட வில்லை கல்லறையில் பதிவாவதற்கு... வலியால் வரையப்படுகின்றமையால் இதயங்களில் மட்டுமே  பதிவாகின்றன...