பொங்கலோ பொங்கல்

 காலையிலே போட்ட

கோலமும்,

சோலையிலே பூத்த

மலர்களும்,

மாலையிலே சேர்ந்த

மல்லிகையும் வாழ்த்துதே

பொங்கலோ பொங்கல்//

பானையிலே காய்ச்சும்

பாலும் கதிரவனை 

பார்த்து பொங்குதே 

பொங்கலோ பொங்கல்//

வாழை இலையிலே 

வந்து சேர்ந்த

வாழைப்பழமும் பலகாரமும்

கரும்பும் என

கடவுளுக்கு படைத்த 

பொங்கலிலே சுவை

பொங்குதே 

பொங்கலோ பொங்கல்//

கட்டிய வேட்டியை 

கட்டியே மடித்து

வீரநடை போடும் 

அப்பாவோடும் ,

கட்டிய பட்டுச் சேலையுடன்

கலையாய் நடைபோடும் 

அம்மாவோடும்,

புத்தாடையோடு நானும்

குலசாமி கோயிலுக்கு 

குடும்பத்தோடுசெல்லுகையில்

 வீதியெல்லாம்

பொங்கலோ பொங்கல்//

சொந்தங்கள் கூடி

நகைச்சுவை பாடி

ஒன்றாய் சமைத்த

வாழையிலை சாப்பாடு

வாசல் வரை மணக்குதே 

பொங்கலோ பொங்கல்//

பக்கத்து வீட்டு 

பசங்கலோடு சேர்ந்து

பட்டாசு கொலுத்துகையில் 

பொங்கலோ  பொங்கல்//

கதிரவனுக்கு நன்றி

 சொல்லி

கண்குளிர பசுவுக்கும்

பொட்டு வெச்சி

பட்டிக்கு முன்னே

ஒன்னா நின்னு எல்லோரம் 

ஒரு செல்பி எடுக்கையிலே 

பொங்கலோ பொங்கல்//

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்