மழை

காலநிலையே
என்ன உன்
கோலம்
மழையே.....

மழையே,
இடையிடையே நீ
விருந்தாளியாய் வந்தால்
வரவேற்போம் உன்னை...
நீயோ...
இடைவிடாமல் தொந்தரவு
செய்வதேன்?

உஸ்சென பெய்வதால்
பஸ்ஸிலும் செல்ல முடியவில்லை...
தொடர்ந்து பெய்வதால்
தொடரூந்தும் தடைப்பட்டு விட்டது...

மலையகத்தில் மண்சரிவில்
வாடிவீடுகளுமாம்,
மன்னாரில் வெள்ளத்தில்
மாடிவீடுகளுமாம்,
மரங்கள் முறிந்ததால்
மனங்கள் உடைந்த மக்களுமாம்,
 நல்ல மழையில் நனைந்ததால்
பள்ளி செல்லமுடியா
செல்ல குழந்தைகளுமாம்,
என என்னே
உன் கோலம்
மழையே....



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்