இலங்கையர் நாம் மீண்டெழுவோம்.
இந்து சமுத்திர முத்தே
இலங்கை எங்கள் சொத்தே//
சிறு தீவை இங்கு
சிதறடித்த பெருங்காற்றே நீ //
தாண்டவம் ஆட
மாண்டனர் சிலர்
மீண்டனர் பலர்//
தொடர் மழை பொழிய
இடர் எம்மை சூழ//
தொடர் மலைகள் சரிய
தொடர்ந்து உயிர்கள் மண்ணில் மறைய//
உறவுகள் அதிர்ச்சியில் உறைய
சேதமான உடைமைகள்
தேசத்தின் கோலம் ஆயின//
வான் கதவுகள் திறந்தன
வானுலகம் பறந்தன
உயிர்கள் பல//
மலைசரிவால் மண்ணுக்குள்
மாண்டனர்//
வெள்ளத்தால் உள்ளுக்குள்
மூழ்கினர்//
இறுக்கிப் பிடித்த பென்சிலுடன்
இறந்த சிறுவனும்//
கணவன் வருகைக்காய் இன்னும்
கண்ணீருடன் காத்திருக்கும் பெண்ணும்//
மண்ணுக்குள் மர்மமாய்
மறைந்த கிராமமும் //
என இதயத்தை உடைக்கும்
எத்தனை கண்ணீர் கதைகள்//
பணக்காரன் ,ஏழை
பகிர்ந்துண்டனர் ஓர் தட்டில்//
உயிர் காத்து
உடைமைகள் விட்டு ஓட
உறவுகளின் உன்னதத்தை
உணர்த்தியது டிட்வா//
நிலையில்லா உலகில்
நீயும் நானும் ஒன்றென
உணர்த்தியது டிட்வா//
சொத்துகள் செத்துப்போகும்
புண்ணியங்கள் தொடர்ந்து வரும்
உணர்த்தியது டிட்வா//
கற்றது பாடம்
பெற்றது படிப்பினை என நகர்வோம்//
உடைந்தது போதும்
தடையென கவலையை
தகர்த்தெறிவோம்//
இழந்தவை என்றும்
இருந்திடும் நினைவாய் என
மனதினில் கொண்டு எழுந்திடுவோம்//
மறைந்தவர் நினைவுகளை
மலர்இதழ் தூவி
மனதினில் நிறுத்திடுவோம்//
அவர்களின் ஆசிர்வாதங்கள்
அகிலத்தில் என்றும்
உண்டென தினம் மீண்டெழ
உழைத்திடுவோம்//
உள்ளத்தால்,உணர்வால்
உடைந்த இலங்கையை
உயிர்ப்பித்திட,
ஒற்றுமையாய் ஒன்றிணைந்து
ஒரு மனதுடன்
உழைத்திடுவோம்//
பஸ்மினா அப்பாஸ்
அப்புத்தளை
கருத்துகள்
கருத்துரையிடுக